Tuesday 10 December 2013

மாவீரனே வருக வருக


காஷ்மீர் பிரிவினை தூண்டிய தீவிரவாதி, நாடாளுமன்றம் மீது துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள் மீது '' 1 '' ஒரு முறைதான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்(NATIONAL SECURITY ACT) கீழ் கைது செய்தனர், 
கோவை தொடர் குண்டு வெடிப்பு,பூனே இரட்டை குண்டு வெடிப்பு,
மேலும் கடல் வழியாக ஊடுருவி மும்பையில் தாக்குதல் நடத்தி பல உயிர்களை பறித்த தீவிரவாதி மீது கூடதேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை இல்லை, மேழூம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத அளவாக தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 2 வருடமாக 39,000+ கொலை,கொள்ளைகள்,கற்பழிப்புகள் நடந்துள்ளன அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை?

ஆனால் எங்கள் தலைவன்  ஊழல் செய்யவில்லை , திருடவில்லை ,
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கவில்லை, எந்த தவறும் செய்யவில்லை
ஓரு தனி மனிதரின் மீது ஏன் இந்த பொய்யான அடக்குமுறை??
மத்திய அரசு(CENTRAL GOVERMENT) தே.பா.சாட்டத்தை மீண்டும் மீண்டும் ரத்து செய்தும் இந்திய வரலாற்றில் இல்லாத அராஜகமாக, எங்களது இனமான தளபதி (2-1/2) இரண்டரை கோடி வன்னியர்களின் தலைவரும், 
சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு '' மாவீரன் காடுவெட்டி செ.குரு '' அவர்கள் செய்யாதகுற்றத்திற்காக அந்த தீவிரவாதியை விட மோசமாக பொய்யாக  '' 4 '' நான்கு முறை தேசிய பாதுகாப்பு சட்டமா(NSA)???



219 நாட்கள் ," 7 " ஏழு மாதங்கள் சிறை,பல முறை குண்டாஸ், '' 4 '' நான்கு தேசிய பாதுகாப்புச் சட்டங்கள்... ஓரு தனி நபராக அரசு இயந்திரத்தின் அனைத்து அடுக்கடுக்கான பொய் வழக்குகளையும்,தடைகளையும் 
நீதிமன்றத்தின் உதவியுடன் உடைத்து, அனைத்தையும் வென்று நீதியை நிலைநாட்டி சிறையில் இருந்து மீண்டு வந்த 

எங்கள் வன்னிய சிங்கமே எங்களின் அடையாளமே
            நீர் வாழ்க பல்லாண்டு

Monday 2 December 2013

வன்னியர்களின் பட்டங்கள்

வன்னிய குல க்ஷத்ரியர்கள் பட்ட பெயர்கள்

அதியமான்
ஆறுமறையார்
அன்பனார்.
அண்னலங்காரர்
ஆண்டுகொண்டார்
அஞ்சாத சிங்கம்
பள்ளி
படையாண்டவர்
துரை
ஜெயப்புலியார்
புலிக்குத்தியார்
முனையரையர்
முத்தரையர்
மானங்காத்தார்
வாணத்தரையர்(வானதிராயர்)
தேவர்
தொண்டைமான்
தொண்டாம்புரியார்
ஞானியார்
பிடாரியார்
சேத்தியார்
வாண்டையார்
முதன்மையார்(முதலியார்)
நன்மையார்
வணங்காமுடியார்
நாயகர்(நாயக்கர்)
காலாட்கள் தோழ உடையார்
பிள்ளை
ரெட்டியார்
கவுண்டர்
கண்டர்
வீரமிண்டர்
வன்னியனார்
ரெட்டைக்குடையார்
சேரனார்
சோழனார்
சோழங்கனார்
சோழகங்கர்
வல்லவர்
அரசுப்பள்ளி
பாண்டியனார்
பரமேஸ்வர வன்னியனார்
நயினார்
நாட்டார்
பல்லவராயர்
காடவராயர்
கச்சிராயர்
சம்புவராயர்
காலிங்கராயர்
சேதுராயர்
சேதுபதி
தஞ்சிராயர்
வடுகநாதர்
பாளையத்தார்(பாளையக்காரர்)
சுவாமி
ஆண்டை(ஆண்டவர்)
செம்பியன்
உடையார்
காங்கேயர்
நரங்கிய தேவர்
கண்டியதேவர்
சாமர்த்தியர்
சாளுக்கியர்
சாமந்தர்
பல்லவர்
பண்டாரத்தார்
தந்திரியார்
ராஜாளியார்
கங்கண உடையார்
மழவராயர்
மழவர்
பொறையர்(புரையர்)
பூபதி
பூமிக்குடையார்
ராயர்
வர்மா
நாயக வர்மா
கங்கரையர்
படையாட்சி
படைவெட்டியார்
படைஎழுச்சியார்
காசிராயர்
ராய ராவுத்த மிண்டார்
மூப்பனார்
வள்ளை(வள்ளல் என்பதன் மரூஉ)
பின்னடையார்
சேனைக்கஞ்சார்
பரிக்குட்டியார்
சேர்வை
கட்டிய நயினார்
கிடாரங்கார்த்தவர்
சமுட்டியர்
ஷத்திரியக்கொண்டார்
மருங்குப்பிரியர்
பண்ணாட்டார்
கருப்புடையார்
நீலாங்கரையார்
கடந்தையார்
வில்லவர்
கொம்பாடியார்
தென்னவராயர்
தென்னவராய தேவர்
வண்ணமுடையார்
மேஸ்திரி
தேசிகர்
நரசிங்க தேவர்
காடுவெட்டியார்
உருத்திரனார்,
செங்கழுநீரார்,
ஆணை கட்டின பல்லவராயர்,
சற்றுக்குடாதார்,
கரிகால் சோழனார்
...இன்னும் பல நூறு பட்ட பெயர்கள் உண்டு...

Friday 6 September 2013

தூர்வாரபடாமல் இருக்கும் குளங்கள்



சரியான நீர் மேலாண்மை இல்லாததாலும் குளங்களுக்கு நீர் செல்லும் பாதைகள்(கண்மாய்கள்) ஆக்கிரமிப்பு செய்யபட்டிருப்பதாலும் சரியாக தூர்வாரபடாததாலும், ‘’ காவிரி ஆற்றில் ‘’ தண்ணீர் வந்து பல மாதங்கள் ஆன பின்பும் குளத்திற்கு தண்ணீர் செல்லவழியில்லாததால் இன்றளவும் வறண்டு கிடக்கும் நமது ஊர்
'' குளங்கள், அடி பம்புகள், மேல் மோட்டார்கள், கிணறுகள் ''
இதனால் கோடைகாலத்தில் தண்ணிர் மட்டம் அகல பாதளத்திற்கு சென்றுவிடுகிறது. சாதாரணமாக 20 அடியில் கிடைக்கும் தண்ணிர்
கூட 60 - 150 அடி வரை செல்கிறது.
கோடைகாலத்தில் பெரும் '' குடிநீர் பஞ்சம் '' ஏற்படுகிறது,
மேலும் தூர்வாரபடாத கண்மாய்களால் மழை காலத்தில் தண்ணீர் வடிய
இடம் இன்றி பொது மக்கள் செல்லும் பாதையில் பல மாதங்கள் தேங்கி நிற்கிறது, இதனால் பொதுமக்கள் பெறும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர் மேலும் காலரா, டிங்கு போன்ற (VIRUS)நச்சு கிருமிகள் பரவும் ஆபத்தான நிலை ஏற்படுகிறது. பல அரசுகள் மாறி மாறி வந்தும் இன்றளவும் இந்த அவலம் மாறவில்லை,  இவைகள் எல்லாம் என்றாவது மாறும் என்ற நம்பிக்கையுடன் ஊர்மக்கள்,,,.
                                       இப்படிக்கு
                          -நலம் விரும்பிகள் மணலூர் ஊராட்சி

Monday 2 September 2013

விநாயகர் சதூர்த்தி விழா



அருள்மிகு சிற்றாற்ங்கரை சித்தி விநாயகர் ஆலய விநாயகர் சதூர்த்தி பெருவிழா மிகச்சிறப்பான முறையில் நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு கேட்டுகொள்கிறோம்
                      ---- நிகழ்ச்சி நிரல் ----
தமிழ் மாதம்
கிழமை
மணி
நிகழ்ச்சி
விசய வருடம்
ஆவணி 24
(09-09-2013)

திங்கள்  
மதியம் 12 மணி
மாலை 6 மணி
இரவு 7.30 மணி
சிறப்பு அபிசேகம்

சந்தனகாப்பு அலங்காரம்

தீபாராதனை & அன்னதானம்
ஆவணி 25
(10-09-2013)
செவ்வாய்
மதியம் 2.30மணி
நாதசுவர இன்னிசை வானவேடிக்கையுடன்
விநாயகர் வீதியுலா

குறிப்பு : அன்று மாலை(10-09-2013) செவ்வாய்கிழமை 6 மணிக்கு மணலூர் காவிரி ஆற்றங்கரையில் விநாயகர் விசர்சனம் மற்றும் அன்னதானம் நடைபெறும்

Saturday 6 July 2013

மாவீரன் நாகப்பன் படையாட்சி

உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகம்! இன்று 104 ஆம் நினைவு நாள் (6.7.2013)

சாமி நாகப்பன் படையாட்சி
மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும். இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப் போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம் சத்தியாகிரகம்தான். அப்படிப்பட்ட தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போருக்காக முதன்முதலில் உயிர்த்தியாகம் செய்தவர் சாமி நாகப்பன் படையாட்சி. இன்றுதான் (6.7.2013) அவரது 104 ஆவது நினைவு நாள்.

குஜராத் மாநிலத்தில் பிறந்து லண்டனில் சட்டம் பயின்ற காந்தி, 1893 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நேட்டாலில் பணிக்கு சேர்ந்தார்.அப்போது தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள்தான், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கியது.

மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம்

1906 ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இந்தியர்கள் தமது பெயரையும் கைரேகையையும் பதிவு செய்து கொண்ட ஆவணத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். வேலை, தங்குமிடம் என எல்லா இடத்திலும் இந்தியர்கள் தனியாக பிரித்து வைக்கப்படுவார்கள். புதிதாக இந்தியர்கள் எவரும் டிரான்சுவால் மாகாணத்திற்குள் குடியேறக்கூடாது, மூன்று பவுண்ட் வரி செலுத்த வேண்டும், இந்தியர்களின் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பல விதிமுறைகளை முன்வைத்தது அச்சட்டம்.

இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இச்சட்டம் இந்தியர்களை துன்புருத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய காந்தி, விளைவுகள் எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் இந்தியர்கள் இச்சட்டத்தை எதிர்க்க அழைப்புவிடுத்தார்.
தென் ஆப்பிரிக்காவில் காந்தி
1906ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் நகரில் சுமார் மூன்றாயிரம் இந்தியர்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் தனது அறவழிப்போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். அதாவது, இச்சட்டம் செயலுக்கு வந்தால் இந்தியர்கள் தமது பெயரை பதிவு செய்துகொள்ளக்கூடாது. சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தியின் வடிவமைப்பில் உருவான உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். 1907 ஆம் ஆண்டு ஜூலை மாதம் டிரான்சுவால் காலனி அரசாங்கம் ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. தனது பெயரை பதிவு செய்யாத இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. அந்தவகையில் காந்தி வெற்றி பெற்ற முதல் போராட்டமும் இதுதான்.

காந்தி முதல் முறையாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். மகாத்மா காந்தி சத்தியாகிரகம் என்கிற போராட்டமுறையை வடிவமைத்ததும் இப்போராட்டத்தில்தான். எதிராளிக்குத் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படையாகும். இந்த முதல் சத்தியாகிரக போராட்டமே இந்திய விடுதலைப் போருக்கு வழிகாட்டியாக அமைந்தது.

உலகின் முதல் சத்தியாகிரக தியாகி

"இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும்,  தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார்.
ஜொகனஸ்பர்க் கான்சிடியூசன் மலை அரசு அருங்காட்சியகத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவுப் படம்
முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக ஜூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழந்து மரணத்தை தழுவினார். ஜூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர். சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு.

அந்த சமயத்தில் டிரான்சுவால் இந்தியர்களின் போராட்டம் குறித்து பிரச்சாரம் செய்வதற்காகான பிரதிநிதியாக லண்டன் சென்றிருந்தார் காந்தி. சாமி நாகப்பன் படையாட்சி கைது செய்யப்பட்ட ஜூன் 21 ஆம் நாள் அன்றுதான் காந்தி ஜொகனஸ்பர்க் நகரிலிருந்து லண்டனுக்கு கிளம்பினார். அவர் ஜூலை 10 அன்று லண்டன் சென்று சேர்வதற்குள் சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்துவிட்டார். காந்தியிடம் ஜூலை 12 ஆம் நாள் தந்தி மூலமாக அவரது தியாக மரணம் தெரிவிக்கப்பட்டது.

1914 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், ஜூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர்க் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி. அதுதான் மகாத்மா காந்தியின் கடைசி தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சி.
நெல்சன் மண்டேலாவின் நண்பரும், விடுதலைப் போராட்ட வீரருமான வால்டர் சிசுலுவால் 20.4.1997 அன்று மீண்டும் திறக்கப்பட்ட  சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம்.
தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது. அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர்.

சாமி நாகப்பன் படையாட்சி குறித்து மகாத்மா காந்தி

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும். தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் எழுத்தும் பேச்சும் இந்தியன் ஒப்பீனியனில் தொடர்ந்து வெளியானது.

தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது -  நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி. தனது சகோதரர் இறந்த போது - நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.
- Collected Works of Mahatma Gandhi - Volume 10 பக்கம் 151 
சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.

அடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில் இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும்  நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.

காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி. சென்னை, மதுரை, தூத்துக்குடி, நாகப்பட்டிணம் என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம்  நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

இந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் 'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்' எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தி.

"நாகப்பன் ஒரு இளம் சத்தியாகிரகி. பதினெட்டு வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்தார். அதிகாலையில் சாலை அமைக்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரட்டை நிமோனியாவால் தாக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியானவுடன் 6.7.1909 அன்று வீர மரணம் அடைந்தார்.

நாகப்பன் கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப் போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர் ஒருபோதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதை அவர் பெருமிதமாகக் கருதினார்.

நம்முடைய தராதரத்தில் பார்த்தால் நாகப்பன் எழுத்தறிவற்றவர். அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலமும் சூலு (தென் ஆப்பிரிக்க) மொழியும் பேசினார். அரைகுறை அங்கிலத்தில் எழுதினார். எப்படிப்பார்த்தாலும் அவர் கற்றறிந்தவர் அல்ல. இருந்தாலும் அவரது தேச பக்தி, அவரது வலிமை, அவரது எதையும் தாங்கும் துணிச்சல், மரணத்தையே எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அவர் எல்லாம் வல்லவராக இருந்தார்.

கற்றறிந்த கல்விமான்களால் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போர் வெற்றிபெறவில்லை, மாறாக நாகப்பன் போன்ற வீரர்கள்தான் அதனை வெற்றியடைய வைத்தனர்" என்று எழுதியிருக்கிறார் காந்தி.

சாமி நாகப்பன் படையாட்சியைப் போன்று தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் முதன்மை இடத்தை பிடிக்கும் மற்றொரு போராளி, மற்றொரு தமிழர் வள்ளியம்மா முனுசாமி முதலியார். தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று 1913 டிசம்பர் 22 அன்று தனது தாயாருடன் கைது செய்யப்பட்டார். மூன்று மாத சிறைத்தணடனைப் பெற்று காந்தியின் துணைவியார் கசுதூரிபா காந்தியுடன் சிறையில் இருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்ட போதும் வெளிவர மறுத்தார். எனினும் சத்தியாகிரக போராட்டம் வெற்றி பெற்றதால் 1914 ஜனவரி 11 அன்று விடுதலை ஆனார். சிறையில் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் 1914 பிப்ரவர் 22 அன்று மரணமடைந்தார். அப்போது வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் வயது 16. தமிழ்நாட்டில் அவர் 'தில்லையாடி வள்ளியம்மை' என்று அறியப்படுகிறார்.

தென் ஆப்பிரிக்க கான்சிடியூசன் மலை அருங்காட்சியகத்தின் தியாகிகள் பட்டியலில் சாமி நாகப்பன் படையாட்சியின் பெயருக்கு அடுத்த பெயராக வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சாமி நாகப்பன் படையாட்சியின் படத்திற்கு அடுத்த படமாக வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் படம் இடம் பெற்றுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் வரலாற்று பக்கங்களில் சாமி நாகப்பன் படையாட்சி மறக்கப்பட்டுவிட்டார்.

இனியாவது சாமி நாகப்பன் படையாட்சி அவர்களின் மாபெரும் தியாகம் போற்றப்பட வேண்டும்.

Thursday 25 April 2013

காவடீ,பால்குடம்,அலகு காவடி




இன்று நடைபெற்ற காவடீ,பால்குடம்,அலகு காவடி

நீர் மோர்


சத்ரியன் குழுமம் சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் நீர் மோர் வழங்கப்பட்டது

சீறுடை வழங்கள்


வன்னியர் சங்கம் சார்பில் அனைவருக்கும் சீறுடை வழங்கபட்டது

அனைவரையும் வருக இறை அருள் பெருக


Monday 15 April 2013

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு இனிதாக கொண்டாட பட்டது

Thursday 11 April 2013

பெயர் பலகை

வன்னியர் சங்கம் மற்றும் சத்ரியன் குழுமம் சார்பாக
பெயர்பலகை ஊர் முழுவதும் வைக்கப்பட்டது


Saturday 6 April 2013

அருள்மிகு ஏழூலோக நாயகி அம்மன் வீதியுலா

 
அருள்மிகு ஏழூலோக நாயகி அம்மன் வீதியுலா வருகின்ற
சித்திரை மாதம் 12 ம் தேதி ( 25-04-13 ) அன்று சந்திரகிரகனம் காரணமாக காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது, அனைத்து பக்தகோடிகளும் கலந்து கொண்டு இறையருள் பெருமாறு வன்னியர் சங்கம் சார்பில் கேட்டு கொள்கிறோம்

சத்ரியன் விளையாட்டு குழு

சத்ரியன் விளையாட்டு குழு ....,


கைபந்து அணி